Tuesday, November 16, 2010

16 வயதினிலே


ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஆதிலாபானு(24). இவர் குப்பான்வலசையைச் சேர்ந்த முத்து மகன் முத்துச்சாமியை காதலித்து திருமணம் செய்தார். இதற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் குப்பான்வலசையில் குடியேறினர். முத்துச்சாமி மதம் மாறி, அகமது என, பெயரை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு முகமது அஸ்லம்(7) அஜிராபானு(5) என்ற குழந்தைகள் உள்ளனர்.

வேலைக்காக முத்துச்சாமி மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே மனகசப்பு ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன், தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரம் பாரதிநகரில் ஆதிலாபானு குடியேறினார். கடந்த நவ., 8ம் தேதி ஆதிலாபானு, குழந்தைகள் மாயமாகினர். ஹம்சத்நிஷா கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலை மதுரை நோக்கிச் செல்லும் வழியில் கட்டக்குளம் பிரிவு தரைப்பாலத்தின் கீழ், நேற்று அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு பிணமாக கிடந்தார். அருகே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் விராலிபட்டி பிரிவு பாலத்தின் கீழ், வெள்ளை வேட்டியில் சுருட்டி கட்டப்பட்ட நிலையில் குழந்தைகள் முகமது அஸ்லம், அஜிராபானுவின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன், பானுவின் தாயை அழைத்துக்கொண்டு வாடிப்பட்டி சென்றார்.

கொலை சம்பவத்தில், கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட மோதலே காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நான்கிற்கும் மேற்பட்டோர் பானுவுடன் தொடர்பு வைத்திருப்பதாக தெரிவதால், இதில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனது 16வது வயதில் வேறுபிரிவை சேர்ந்த முத்துச்சாமியை ஆதிலா பானு காதலித்ததற்கு ஊரார் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மறைந்த மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க., செயலர் சீனிக்கட்டியின் கார் டிரைவராக முத்துச்சாமி பணியாற்றினார். சீனிகட்டியின் தாய் பசீர் அம்மாள் இவர்களது திருமணத்தை நடத்திவைத்தார். மைனர் வயதில் காதல் வசப்பட்ட ஆதிலா பானுவுக்கு, நாட்கள் கடந்த போது காதல் கசந்தது. கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

Saturday, November 13, 2010

சிந்து சமவெளி

தேனி மாவட்டம், போடி அருகே வாழையாத்துப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (50). மகன் கார்த்திக் (25). இவரது மனைவி ஏத்தக்கோயில் பழனிச்சாமி மகள் பவுன்(23). இரண்டு ஆண்டுகளுக்கு முன் கார்த்திக் தொழில் செய்ய, குடும்பத்துடன் மங்களூரு சென்றார். அங்கு பவுனுக்கும், கருப்பையாவிற்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதை கார்த்திக் கண்டித்தார். தொடர்பு நீடித்ததால், கார்த்திக் கடந்த ஆண்டு போடி அருகே, மீனாட்சிபுரம் கோவிலில் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்தார்.

இந்நிலையில், அவரது உடல் கருகிய நிலையில் கோவில் கருவறைக்குள் கிடந்தது. போடி இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படை, ஆறு மாதத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். கருப்பையா, பழனிச்சாமி, பவுன் ஆகியோரை கைது செய்தனர். மங்களூரில் இருந்து கோபித்துக் கொண்டு வந்த கார்த்திக்கை, கருப்பையா பின் தொடர்ந்து வந்து சமரசம் செய்தார். பழனிச்சாமி முன்னிலையில், கள்ளத்தொடர்பினை விட்டு விடுவதாக கூறியும், ஏற்க மறுத்து கார்த்திக் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த கருப்பையா, பழனிச்சாமி சேர்ந்து கார்த்திக்கை வெட்டி கொன்று, உடலை கோவில் கருவறைக்குள் வைத்து எரித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். சமீபத்தில் வந்த சிந்து சமவெளி  திரைபடம் போல் உள்ளது.  



ஆயிரத்தில் ஒருவன்





Tuesday, November 9, 2010

கள்ளக்காதல்


பாளை அருகே உள்ள மேலபுத்தனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாபிள்ளை. இவரது மகள் சுதா என்ற சுப்புலட்சுமி (30). இவரது கணவர் மாரியப்பன் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சுதா தனது 2 பெண் குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கூலிவேலை செய்து வந்த சுதாவுக்கு கீழப்புத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பார்வதி (வயது 35) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பார்வதிக்கு திருமணமாகி மாரிசெல்வி என்ற மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த விசயம் தெரிந்து ஆத்திரமடைந்த அய்யாபிள்ளை, மகள் சுதாவை கண்டித்தார்.

இதனால் கள்ளக்காதலியை சந்திக்க முடியாமல் தவித்த பார்வதி, நேற்று நள்ளிரவு 11 மணிக்கு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது சுதா வீட்டிற்குள் நுழைந்தார். கள்ளக்காதலனை எதிர்பார்த்திருந்த சுதா அவரை வீட்டின் மாடி அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர்.

நள்ளிரவு மாடியில் சத்தம் கேட்பதை அறிந்த சுதாவின் தம்பி மாரி செல்வம், தந்தை அய்யாபிள்ளை, தாயார் செல்லம்மாள் ஆகியோரை எழுப்பி மாடிக்கு சென்றார். அங்கு அவர்கள் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஆத்திரமடைந்த அவர்கள் அருகில் கிடந்த இரும்பு பட்டை, மண்வெட்டி கணை ஆகியவற்றால் பார்வதியை சரமாரி தாக்கினார்கள். அவரை அடிக்காதீர்கள் என்று தடுத்த சுதாவுக்கும் சரமாரி அடி விழுந்தது. இதில் பார்வதி, சுதா ஆகியோரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. நள்ளிரவு நடந்த இந்த சம்பவத்தால், அந்தப்பகுதியில் ஏராளமானவர்கள் கூடினார்கள்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், செந்தட்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிய கள்ளக்காதல் ஜோடியை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே பார்வதி இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சுதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆயிரத்தில் ஒருவன்





Monday, November 8, 2010

சந்தேகம்


கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள சாமி செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் கடம்பன் இவரது மகள் கவிதாபாரதி(23). இவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த அருள்மொழி(30) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது குழந்தை இல்லை. அருள்மொழி திருப்பூரில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு சாமிசெட்டிபாளையத்திலுள்ள வீட்டு தண்ணீர் தொட்டியில் கவிதாபாரதி பிணமாக கிடந்தார். வீட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு கீழே கிடந்தது. கவிதாபாரதியின் கழுத்தில் இருந்த எட்டு சவரன் தங்கச்செயின் காணாமல் போயிருந்தது. துடியலூர் பெண் போலீசார் வழக்கு பதிவு செய்து, கணவர் அருள்மொழியை கைது செய்தனர். திருமணமாகி ஓராண்டுக்குள் கவிதாபாரதி மர்மமான முறையில் இறந்துள்ளதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அருள்மொழி, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கவிதாபாரதியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்தது; ஆண் நண்பர்கள் அதிகளவில் இருந்தனர். தினமும் இரவு நேரத்தில் அவளுக்கு மொபைல் போனில் அழைப்புகள் வரும். நீண்ட நேரம் பேசுவாள். கேட்டால் எதையாவது சொல்லி மழுப்புவாள். கோவையில் உள்ள தையல் பயிற்சி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். ஆனால், அடிக்கடி அங்கு போகாமல் ஆண் நண்பர்களுடன் பைக்கில் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாள். இதனால், அவளை கொலை செய்ய தீர்மானித்து கடந்த 4ம் தேதி இரவு சாமிசெட்டிபாளையத்தில் உள்ள வீட்டில் கழிவறைக்கு அழைத்து சென்றேன். அங்கிருந்த தரைமட்டத் தொட்டியில் தள்ளி கொலை செய்தேன். போலீசாரை திசை திருப்ப கவிதாபாரதியிடம் இருந்த எட்டு சவரன் தங்க செயின் எடுத்து வைத்துக் கொண்டேன். என்னுடைய பைக்கை சில அடிதூரம் திருடர்கள் இழுத்து சென்றதை போல செட்-அப் செய்து நாடகமாடினேன். இருந்தாலும், போலீசார் கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு அருள்மொழி கூறினார்.

Friday, October 29, 2010

கொலையும் செய்வாள்......

கிருஷ்ணகிரி அருகே 2 நாட்களுக்கு முன்பு இரவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக சென்ற காரை நிறுத்தினார்கள்.

அந்த கார் நிற்காமல் சென்றதால் போலீசார் விடாமல் துரத்தினார்கள். வேகமாக சென்ற கார் நாகரசம்பட்டி அருகே ரோட்டோரம் இறங்கியது. அந்த வேளையில் காரில் வந்தவர்கள் அதில் இருந்து இறங்கி தப்பியோடினார்கள்.

விரட்டி சென்ற போலீசார் காரை சோதனையிட்ட போது காருக்குள் ஒரு ஆண் பிணம் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை சேர்ந்த பசுவராஜ் (வயது 28) என்பது உறுதி செய்யப்பட்டது.

பசுவராஜை அவரது மனைவி ராஜேஸ்வரி, மாமியார் சவுந்தரி, கள்ளக்காதலன் வெங்கடாசலம் ஆகியோர் கொலை செய்துள்ளது வெட்ட வெளிச்சம் ஆனது. மேலும் பிணத்தை ராயக்கோட்டை ரெயில்வே பாதையில் வீசிவிட எடுத்துச்செல்லும் போது போலீசார் துரத்தியதால் பாதை மாறி சென்றதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் கொலையுண்ட பசுவராஜின் மனைவி ராஜேஸ்வரி, அவரது தாயார் சவுந்தரி, கள்ளக்காதலன் வெங்கசாடலம், அவரது நண்பர் சந்தோஷ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கைதானவர்கள் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில்

பசுவராஜூக்கும், ராஜேஸ்வரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆனால் திருமணத்துக்கு முன்பே, ராஜேஸ்வரிக்கும், வெங்கடாசலத்துக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. திருமணத்துக்கு பின்பும், கள்ளக்காதலை இருவரும் வளர்த்துள்ளனர்.

இதையறிந்த பசுவராஜ், மனைவி மற்றும் கள்ளக்காதலன் வெங்கடாசலத்தை கண்டித்தார். இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு வெங்கடாசலத்துடன் ராஜேஸ்வரி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை போலீசில் பசுவராஜ் கொடுத்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜேஸ்வரியை கணவர் பசுவராஜுடன் சேர்த்து வைத்தனர்.

ஆனால் வெங்கடாசலத்துடன் மனைவி ராஜேஸ்வரி ஓடிய சம்பவம், பசுவராஜுக்கு பயங்கர ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் மனைவியை தினமும் அடித்து சித்ரவதை செய்தார். இதை தட்டிக்கேட்ட தாய் சவுந்தரியையும் அடித்தார். இதையடுத்து அவரது கொடுமை தாங்காமல் பசுவராஜை கொலை செய்ய தாய், மகள் மற்றும் கள்ளக்காதலன் ஆகியோர் திட்டம் தீட்டினார்கள்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாப்பாட்டில் 3 முறை விஷம் வைத்து கொடுத்தனர். ஆனால் அவர் சாகாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்தனர். இந்த கொலை முயற்சி சமீபத்தில் பசுவராஜுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இதுகுறித்து ஓசூரில் உள்ள தனது அண்ணனுக்கு தெரிவித்தார். இதுகுறித்து பேசுவதற்கு ஓரிரு நாளில் வருவதாக அவரது அண்ணன் கூறினார்.

அண்ணன் வந்தவுடன், இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக பசுவராஜ் அனைவரையும் மிரட்டினார். இதனால் பயந்து போன அவர்கள், பசுவராஜை கொலை செய்ய மீண்டும் முடிவு செய்தனர். இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த பசுவராஜை, சுடிதார் துப்பட்டாவால் ராஜேஸ்வரி, அவரது தாய் சவுந்தரி ஆகிய 2 பேரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி படுகொலை செய்தனர்.

பின்னர் இதுகுறித்து கள்ளக்காதலன் வெங்கடாசலத்திடம் கூறினர். வெங்கடாசலம் தனது நண்பர் சந்தோஷ்குமாருடன் வந்தார். பின்னர் உடலை ராயக்கோட்டை ரெயில்வேகேட் அருகே வீசிவிட்டு செல்லலாம் என்று காரில் வந்த போது போலீசார் விரட்டினர். தப்பிவிட வேண்டும் என்று கருதி காரை திருப்பத்தூர் ரெயில்வே கேட்டுக்கு வேகமாக ஓட்டினார்கள். ஆனால் போலீசார் அதற்குள் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர்.

Tuesday, October 19, 2010

காவல் காதல்

நெல்லை அருகே இரண்டு கள்ளக்காதலிகளை கொடூரமாக கொலை செய்த ஆயுதப்படை போலீஸ்காரர், தாமும் தற்கொலை செய்து கொண்டார்.நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு ஆயுதப்படை போலீசின் 9ம் பட்டாலியன் படையில் ஏட்டாக பணிபுரிபவர் உமாமகேஸ்வரி (36). 1997 முதல் தற்போது வரை அங்கேயே பணியாற்றுகிறார். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பணகுடி, கோரி காலனியாகும். இவரது கணவர் இசக்கியப்பன் (40), மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் ஏட்டாக உள்ளார். தற்போது தூத்துக்குடியில் பணியாற்றுகிறார்.

மணிமுத்தாறு பட்டாலியன் அருகே பழைய குடியிருப்பில் தங்கி, பணிக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு சுதர்சன் (9) என்ற மகனும், சுபத்ரா (5) என்ற மகளும் உள்ளனர். இருவரும் அங்குள்ள பள்ளியில் படிக்கின்றனர். உமாமகேஸ்வரியின் தாயார் மரியதங்கம் இவர்களுடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் உமாமகேஸ்வரி, பாதுகாப்பு பணிக்கு செல்வதாக கூறி, பட்டாலியன் அலுவலகத்திற்கு சென்றார்; நேற்று காலை வீடு திரும்பவில்லை. பட்டாலியன் அலுவலகம் அருகே இடிந்து போன கட்டடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அந்த வழியே சென்ற பெண் காவலர் ஒருவர் பார்த்து, பட்டாலியன் அலுவலகத்திற்கு தகவல் கூறினார்.

இறந்து கிடந்த உமாமகேஸ்வரியின் வலதுதாடையில் பலத்த அரிவாள் வெட்டு இருந்தது. உடலில் வேறு சில காயங்களும் இருந்தன. நள்ளிரவில் கொலை நடந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ரத்தம் காய்ந்திருந்தது. போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் கொடூரமான கொலை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் துப்பறியும் நாய், தடயவியல் நிபுணர்கள் விசாரணையில் ஈடுபட்டனர்.சம்பவம் குறித்து உமாமகேஸ்வரியின் தாயார் தந்த புகாரில், மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் காவலராக பணியாற்றும் இசக்கிமுத்து என்பவர் உமாமகேஸ்வரியை தம்முடன் வாழ வருமாறு அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும், அவர் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இசக்கிமுத்து (32) நெல்லை மாவட்டம் கோபால சமுத்திரத்தை சேர்ந்தவர். மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9வது பட்டாலியனில் போலீஸ்காரரான இவருக்கு திருமணமாகி, மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால், இவர் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.இசக்கிமுத்து, கீதா (39) என்ற பெண்ணுடனும் தொடர்பு வைத்திருந்தார். இசக்கிமுத்துவின் உறவினரான கீதாவின் கணவர் பச்சமுத்து, அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர். இவர், அண்மையில் வெளிநாடு சென்று விட்டார். அதன் பின், கீதா அவரது தாயின் சொந்த ஊரான திட்டுவிளையில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். இசக்கிமுத்து அடிக்கடி இங்கு வந்து, கீதாவை சந்தித்து செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவில் பெண் போலீஸ் உமாமகேஸ்வரியை வெட்டி கொன்று விட்டு, இசக்கிமுத்து பைக்கில் நள்ளிரவில் பூதப்பாண்டிக்கு வந்தார். இங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பைக்கை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்துக்கு சென்று, மொபைல்போனில் அங்கு வரும்படி கீதாவை அழைத்துள்ளார். ஆனால் கீதா செல்ல மறுத்தார்.மறுநாள் அதிகாலை, கீதாவின் வீட்டுக்கு சென்ற இசக்கிமுத்து, அவரை பாழடைந்த கட்டடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, கீதாவை சுட்டுக் கொன்றுவிட்டு, இசக்கிமுத்து தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இசக்கிமுத்து மணிமுத்தாறு பட்டாலியனில் துப்பாக்கிகளை பாதுகாக்கும் பிரிவில் வேலை பார்த்து வந்தார். இதை பயன்படுத்திய அவர், ஒரு துப்பாக்கியை திருடிக் கொண்டு வந்தார். அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து 26 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கொலை செய்யப்பட்ட கீதாவுக்கு சுருதி (15) என்ற மகளும், திவாகர் (13), பிரபாகர் (13) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

Thursday, October 14, 2010

காமபசி

திருச்சியில், புகழ்பெற்ற தூய வளனார் கல்லூரி முதல்வர் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்த கற்பழிப்பு புகாரை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.திருச்சி தூய வளனார் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் முதல்வராக ராஜரத்தினம் உள்ளார். இவர் மீது, அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி  நேற்று முன்தினம் இரவு, கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில் கடந்த 2006ம் ஆண்டு முதல், திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில், இசையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தாகவும். தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ராஜரத்தினம், அந்த கல்லூரிக்கு அடிக்கடி வந்தபோது, எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது என்றும். பழக்கத்தின் அடிப்படையில் 2006 ஜன., 22ம் தேதி, ராஜரத்தினத்தை தனியாக சந்தித்தபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னை கெடுத்து விட்டதாகவும்.அதை மொபைல் போனிலும் படம் எடுத்து தொடர்ந்து என்னை மிரட்டி, பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்துள்ளான். இதனால், 2008ம் ஆண்டு தான் கர்ப்பமடைந்ததாக புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாதிரியார் ராஜரத்தினத்திடம் தெரிவித்தபோது, தன்னை சமாதானப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்துள்ளான். இத்தகவல் தான் சார்ந்த சபைக்கு தெரிந்தவுடன்,தன்னை சபையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டனர் என்றும் பாதிரியார் ராஜரத்தினத்தை சந்தித்து நியாயம் கேட்டதற்கு, "இனிமேல் அவரை பார்க்கக் கூடாது என்றும்  இதுதொடர்பாக யாரிடமும் பேசக் கூடாது' என மிரட்டியுள்ளார்

இதுகுறித்து பாதிரியார் சார்ந்த சபையில் புகார் தெரிவித்தும், நியாயம் கிடைக்கவில்லை.
இதையடுத்து கோட்டை மகளிர் போலீசார், தூய வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது, கற்பழிப்பு மற்றும் மிரட்டல் ஆகிய இருபிரிவுகளிலும், அவருக்கு துணையாக இருந்த மூன்று பாதிரியார்கள் மீது மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்துள்ளனர் . சம்பவம் நடந்து 2 வருடங்கள் ஆகியும் ஏன் முன்பே புகார் கூறவில்லை என்பது யோசிக்க வேண்டிய விடயம் ஆகிறது. இதில் ஏதும் உள்குத்து இருக்கும் போல தான் தெரிகிறது.எது எப்படியோ பாதரியாரின் காமபசி அந்த பெண்னை இறையாக்கி மகிழ்ந்துள்ளது கண்டிக்கதக்கது.

Thursday, October 7, 2010

உல்லாசம்


மாதவரம் பொன்னியம் மன் மேடு சந்திரபிரபு காலனியைச் சேர்ந்தவர் சுந்தரவதனம். கால்டாக்சி டிரைவர். இவரது மனைவி சாந்தி (42). ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன் கல்லூரியில் படித்து வருகிறார். சுந்தரவதனம் வேலைக்கு சென்ற சமயத்தில் வீட்டில் சாந்தி படுக்கையறையில் பிணமாக கிடந்தார்.

இந்த மர்ம சாவு குறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்தினர்.

இதில் சாந்தியின் கள்ளக் காதலன் லோகநாதன் (43) என்பவர் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது. இவர் புழல் காவாங்கரையைச் சேர்ந்தவர். மெக்கானிக்கடை வைத்துள்ளார்.

டிரைவர் சுந்தரவதனம் தனது காரை ரிப்பேர் பார்க்க லோகநாதனின் மெக்கானிக் கடைக்கு கொண்டு செல்வதுண்டு. அப்போது அவரது மனைவியும் உடன் சென்று வருவார்.

இதில் மெக்கானிக் லோகநாதனுக்கும், சாந்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

சுந்தரவதனம் வீட்டில் இல்லாத சமயங்களில் லோகநாதன், சாந்தியை சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளார். சாந்தியின் மகள் திருமணத்துக்கு ரூ. 1 லட்சம் கடனும் கொடுத்துள்ளார்.

இந்த பணத்தை லோகநாதன் திருப்பி கேட்டிருக்கிறார். இப்போது பணம் இல்லை என்று சாந்தி கூறியதால் ஆவேசத்தில் சேலையால் கழுத்தை நெரித்து சாந்தியை கொன்று விட்டு ஓடி விட்டார்.

சாந்தியின் கணவரிடம் போலீசார் விசாரிக்கும் போது லோகநாதன் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார் என்று கூறியதால் சந்தேகப்பட்டு போலீசார் லோகநாதனை பிடித்து விசாரித்தனர். அப்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையொட்டி லோகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Monday, October 4, 2010

காமவெறியன்


பாளை கொக்கிரகுளம் பகுதியைச்சேர்ந்த சிறுமி முருகம்மாள் என்ற 8 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு தாமிரபரணி ஆற்றில் ஒரு சாக்கு மூட்டையில் கிடந்திருக்கிறாள். அவளது அடிவயிற்றில் மிருகத்தனமாக கற்பழிக்கப்பட்டதால் ஏற்பட்ட ரத்தக்காயமும், உடலில் ஆங்காங்கே நகக்கீரல்களும், பல்லால் கடித்த காயங்களும் இருந்தன. பின் தலையில் பயங்கரமாக தாக்கியதில் மண்டை உடைந்து பெரிய ரத்தக் காயமும் இருந்தது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை ஒரு லுங்கி மற்றும் போர்வையில் சுற்றி சாக்கு மூட்டைக்குள் திணித்து ஆற்றில் வீசப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கொலையாளிகளை தேடினார்கள்.
இதில் சிறுமியின் வீட்டுக்கு எதிரே வசித்து வந்த வேலு என்ற கழுதைவேலு (வயது 48) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
தனிப்படை போலீசார் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது வேலு, சிறுமியை கொடூரமாக கற்பழித்து கொலை செய்ததை ஒத்துக் கொண்டான் அந்த் காம கொடூரன். உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். அவன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் தனது சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி என்றும். அங்கு தங்கி இருந்து செங்கல் சூளையில் வேலை செய்து வந்த்தாகவும். சம்பவத்தன்று தனது மனைவி மகள் வீட்டுக்கு சென்று விட்டதால் தனிமையாக இருந்த தனக்கு “செக்ஸ்” வெறி ஏற்பட்டது என்றும். அப்போது பக்கத்து வீட்டுச்சிறுமி முருகம்மாள் விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்ததும் தனக்கு காம வெறி அதிகரித்தது அவளது வாயை துணியால் பொத்தி கற்பழித்த்தாகவும். இதனால் போலீசில் பிடிபட்டு விடுவோமோ என்று பயந்து, சிறுமியின் தலையில் கட்டையால் அடித்து கொலை செய்தததாக வாகுமூலம் அளித்துள்ளான். இவனை போன்ற காமவெறியன்களுக்கு தயவு தாட்சனையின்றி கடுமையான தண்டனைகள் கொடுத்தால் தான் அடுத்தவர்கள் தவறு செய்ய பயப்படுவார்கள்.


Monday, September 27, 2010

நீயா..? நானா..?


சென்னை காசிமேடு சிங்காரவேலன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில், ரவுடி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன.இவருக்கும் வண்ணார பேட்டை போஜராஜன் நகரைச் சேர்ந்த கெஜலட்சு மிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் செந்தில் அடிக்கடி அங்கு சென்று வந்தார். இது கெஜலட்சுமியின் இன்னொரு காதலர்களான செல்வம், பூபாலனுக்கும், கெஜலட்சுமியின் அக்காள் முனிரத்தினத்திற்கும் பிடிக்க வில்லை. இதையடுத்து பூபாலன், செந்திலை தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் பூபாலனை அடித்து உதைத்தார்.
இதனால் செல்வம்- பூபாலன் இருவரும் கூலிப்படை உதவியுடன் செந்திலை கொலை செய்ய திட்டமிட்டனர். இதன்படி நேற்று அதிகாலை 2 மணிக்கு கெஜலட்சுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த செந்திலை வெளியே இழுத்து வந்து கொலை செய்தனர்.
இந்நிலையில் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் செந்தில்குமரன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கோபால குரு தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று கெஜலட் சுமியின் கள்ளக்காதலன் செல்வம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மோகன், மணிகண்டன், கல்லறை மூர்த்தி, மகேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கள்ளக்காதலன் செல்வம் போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-
நானும் பூபாலனும் கெஜ லட்சுமியுடன் பல மாதங்களாக உல்லாசமாக இருந்து வந்தோம். சமீபத்தில் ரவுடி செந்தில் எங்களது ஆசை நாயகியான கெஜலட்சுமியை அபகரித்து கொண்டான். செந்தில் ரவுடி என்பதால் எங்களால் கெஜலட்சுமியுடன் பழக முடியவில்லை.
கெஜலட்சுமியின் அக்காள் முனிரத்தினத்திற்கும் செந்தில் அங்கு வருவது பிடிக்க வில்லை. இதனால் செந்திலை கூலிப்படை உதவியுடன் கொன்றோம்.
அவனை நாங்கள் உயிரோடு விட்டிருந்தால் எங்களை தீர்த்து கட்டி இருப்பான். அவன் முந்துவதற்குள் நாங்கள் முந்தி விட்டோம்.
இவ்வாறு அவன் கூறினான்.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பூபாலன் தலைமறைவாக உள்ளான். அவனை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tuesday, September 21, 2010

தகாத உறவு


பிரசாத் நகரை சேர்ந்தவன் லலித் ரதாவால் (22). பள்ளி வேன் டிரைவர். பாபா நகரில் வசிக்கும் விதவை பெண்ணின் 12 வயது மகளையும் 10 மற்றும் 7 வயதுள்ள மகனையும் லலித் தனது வேனில் பள்ளிக்கு கூட்டி செல்வான். ஆனால் இக் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்லாமல் தனது வீட்டுக்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். சிறுமியின் இரண்டு தம்பிகளுடனும் தகாத உறவு கொண்டுள்ளான். இவனோடு நான்கு கூட்டாளிகளும் சேர்ந்து இந்த கொடுமையை செய்துள்ளனர். இந்த நான்கு பேரும் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள். அதில் ஒருவன் சிறுமி படிக்கும் அதே பள்ளியில் 9ம் வகுப்பு படிப்பவன். இவர்கள் கும்பலாக சேர்ந்து சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கும் மேலாக இந்த கும்பல் குழந்தைகளை இப்படி சித்ரவதை செய்துள்ளது. அவர்களுக்கு போதை ஊசியும் போட்டுள்ளனர். தகாத உறவு கொள்ளும் காட்சியை செல்போனிலும் படம் பிடித்து வைத்துள்ளனர். வெளியே சொன்னால் உங்கள் அம்மாவை கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் இந்த கொடுமையை பற்றி குழந்தைகள் வெளியே சொல்லாமல் இருந்தன. சில நாட்களுக்கு முன்புதான் சிறுமியின் உடலில் ஊசி குத்தியதற்கான அடையாளங்களை பார்த்து தாய் சந்தேகமடைந்தார். சிறுமியிடம் விசாரித்தபோதுதான் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. நிராதரவாக இருக்கும் அப் பெண்ணுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வேன் டிரைவர் லலித்திடம் கேட்டார். இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக அவரையும் லலித் மிரட்டினான். வேறு வழியில்லாத பெண், தன் வீட்டில் குடியிருப்பவரிடம் இதுகுறித்து தெரிவித்தார். அவர் தனக்கு தெரிந்த அரசியல்வாதியிடம் கூற அந்த அரசியல்வாதிதான் தைரியம் அளித்து இதுபற்றி போலீசில் புகார் செய்ய வைத்திருக்கிறார்ர. டிரைவர் லலித் கைது செய்யப்பட்டான். நீதிபதியிடம் ஆஜர்படுத்துவதற்காக வேனில் ஏற்ற அவனை அழைத்துவந்தபோது அங்கு கூடியிருந்த கூட்டம் அவனை அடித்து உதைத்தது. ஆத்திரத்தோடு இருந்த கூட்டத்திடம் இருந்து அவனை போலீசார் மீட்டு. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Friday, September 17, 2010

கல்நெஞ்சம்


உல்லாசத்துக்கு தடையாக இருந்ததால் குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா அரியூரை சேர்ந்தவர் இன்பநிலா (23). நேற்று முன்தினம் இரவு பெராம்பட்டு கிராமத்துக்கு குழந்தை சடலத்துடன் கதறியபடி வந்துள்ளார். ஊர் மக்கள் அவருக்கு ஆறுதல் கூறி, அண்ணாமலைநகர் காவல்துறைக்கு தகவல் தந்துள்ளனர். அவர்கள் வந்து விசாரித்தபோது, ‘‘குழந்தையுடன் சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகைக்கு வந்தாதகவும். உதவி செய்வதாக கூறிய 2 பேர்,தன்னை இருசக்கர வண்டியில் ஏற்றிச் சென்று கற்பழிக்க முயன்றனர் என்றும் மறுத்ததால் தன் குழந்தையை கொன்றுவிட்டனர்’’ என கூறியுள்ளார் இன்பநிலா. குழந்தை சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்பநிலாவையும் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் தனிப்படை அமைத்து வாலிபர்களை தேடி வந்தனர். இதற்கிடையே, இன்பநிலா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது, உண்மைகளை கக்கியுள்ளார். தன் கணவர் பாபு இறந்து 10 மாதங்கள் ஆகிறது என்றும் சென்னையில் கட்டிட வேலை செய்து வந்ததாகவும். அப்போது சிதம்பரத்தை அடுத்த கீழக்குண்டலபாடியை சேர்ந்த சந்துரு என்ற பாலசந்தருடன் (24) பழக்கம் ஏற்பட்டது என்றும். சில நாட்களுக்கு முன்பு அவர் ஊருக்கு வந்து விட்டதாகவும். அவரைப் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் சிதம்பரம் வந்தாகவும் கூறியுள்ளார் இருவரும் பழைய கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு சென்று. அங்கு உல்லாசமாக இருந்தபோது குழந்தை கத்தியுள்ளது சத்தம் கேட்டு யாராவது வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் இருவரும் குழந்தையை காலால் மிதித்து கொன்றுள்ளார்கள். கள்ளக்காதலன் பாலசந்தரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளக்காதல் மோகத்தில் பெற்ற குழந்தையையே கல்நெஞ்சம் படைத்த தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tuesday, September 14, 2010

காதல் மலர்ந்தது


சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ரேணுகா என்ற லட்சுமி (27). வாய் பேசமுடியாதவர். திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். கடந்த 22ம் தேதி, ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை அடுத்த சுமந்திரம்பேடு ஏரியில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சோமங்கலம் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் (30) என்பவர் ரேணுகா என்ற லட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஒரு தனியார் தொழிற்சாலையில் லாரி டிரைவராக வேலை செய்து வந்திருக்கிறார், விஸ்வநாதன். இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு உற்பத்தி செய்யும் பொருட்களை கொண்டு செல்வது வழக்கம் அப்போது, லட்சுமியுடன் விஸ்வநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. விஸ்வநாதன், கடந்த 21ம் தேதி, லட்சுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரை இருங்காட்டுக்கோட்டைக்கு அழைத்து வந்துள்ளார். சுமந்திரம்பேடு ஏரிக்கரையில் அமர்ந்து மது குடித்து, போதை தலைக்கேறிய நிலையில் லட்சுமியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு லட்சுமி. மறுத்துவிட ஆத்திரமடைந்த விஸ்வநாதன், போதையில் லட்சுமியை நிர்வாணப்படுத்தியும், அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்கிறார். விஸ்வநாதனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Friday, September 10, 2010

துரோகம்


திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டில், பழனிசாமி தோட்டத்தின் வேலி ஓரம், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, 32 வயது மதிக்கத்தக்க பெண் உடல், கொலை செய்யப்பட்டு கிடந்தது. பெருமாநல்லூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரித்தனர். திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த அன்பு தண்டபாணி மனைவி சீதாலட்சுமி (32) என்பது தெரிந்தது. இத்தம்பதியருக்கு ஏழு வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், தன் மனைவியை 5ம் தேதி முதல் காணவில்லை என கணவர் அன்பு தண்டபாணி, அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனால், சீதாலட்சுமி, 5ம் தேதியே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்து விசாரணையை துவக்கினர்.

அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளியை தேடினர். கொலையுண்ட சீதாலட்சுமியின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை துவங்கியது. ஆரம்பத்தில் குழம்பிய போலீசாருக்கு மொபைல் போன் மூலம் கிடைத்த விவரங்கள் விசாரணையை வேகப்படுத்தியது. சீதாலட்சுமி போனுக்கு, ஆக., 5ம் தேதி காலை முதல் மாலை 6.00 மணி வரை ஒரே எண்ணில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வந்துள்ளது; அந்த எண்ணுக்குரிய நபரின் முகவரி குறித்து விசாரித்தனர். அந்த எண், 15 வேலம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் ரமேஷ் என்பது தெரிந்தது. போலீசார், ரமேஷ் வீட்டுக்குச் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. அதே, ஆகஸ்ட் 5ம் இரவு 10.00 மணிக்கு தன் நண்பர் மாதேஷ் உடன் பைக்கில் சென்ற ரமேஷ், அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. அவினாசி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருந்தனர். விபத்தில் பலியான ரமேஷுக்கும், கொலையான சீதாலட்சுமிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை துவங்கியது.

விபத்தில் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதேஷிடம், போலீசார் தீவிரமாக விசாரித்தனர். ஆனால், விசாரணையில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்க முடியாதவாறு மாதேஷ், கோமா நிலைக்கு சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியுற்ற போலீசார், சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில் விசாரித்தனர். அதில், பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகின.

கொலையான சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில், லேபர் கான்ட்ராக்டராக ரமேஷ் பணியாற்றியுள்ளான். ஓராண்டாக காதலித்த இருவரும், ஊட்டி, கொடைக்கானல் என்று ஜாலியாக சுற்றியுள்ளனர். ரமேஷை தன் கணவனாகவே பாவித்த சீதாலட்சுமி, அவனின் தங்கை திருமணத்துக்கு பணமும், செலவுக்கு தன் நகைகளையும் கொடுத்துள்ளார். ரமேஷ் வீட்டில், அவனுக்கு பெண் பார்க்கத்துவங்கியதும் சீதாலட்சுமியை கழற்றி விட திட்டமிட்டான். பல நேரத்தில் இதுகுறித்து ரமேஷ் பேசியபோது, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சீதாலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்ட ரமேஷ், ஆகஸ்ட் 5ம் தேதி அவளை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறி, பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டுக்கு அழைத்துச் சென்றான். பொங்குபாளையம் - கணக்கம்பாளையத்தில் உள்ள பழனிசாமி தோட்டம் பகுதிக்கு அழைத்து வந்தான். அங்கு ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த கத்தியால், அன்று இரவு 7.45 மணிக்கு அவளது வயிறு மற்றும் கழுத்தில் குத்தியுள்ளான். அவள் இறந்ததை உறுதிப்படுத்தி விட்டு, அங்கிருந்து வீட்டுக்குச் சென்றான். கொலை செய்தபோது அணிந்திருந்த சட்டையை கழற்றி, பைக்கில் வைத்து விட்டு, வேறு சட்டையை அணிந்து புறப்பட்டான். அவினாசி ரோட்டில் உள்ள குப்பை தொட்டியில் ரத்தக்கறை படிந்த சட்டையை போட்டான். பின், நண்பர்கள் ஜெயராஜ், செல்வமணி, மாதேஷ் ஆகியோருடன் மதுக்கடைக்குச் சென்று மது குடித்துள்ளான். அங்கிருந்து மாதேஷை மட்டும் ஏற்றிக் கொண்டு, தெக்கலூர் சென்றபோது, அவினாசி - ஆட்டையாம் பாளையம் அருகே லாரி மோதி இறந்தான்.

ஒரே பனியன் நிறுவனத்தில் வேலை செய்த இருவரும் பழகி, பல ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவ்வப்போது சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்ற ரமேஷ், நகைகளை வாங்கி அடமானம் வைத்து செலவு செய்துள்ளான். கொலை நடந்த அன்று காலை கூட, திருப்பூரில் உள்ள பிரபல வங்கிக்குச் சென்று பணம் எடுத்துள்ளான். இதை வங்கியில் உள்ள கேமரா மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் காவல்துறையினர். அவன் அணிந்திருந்த சட்டையை ரத்தக்கறையுடன் குப்பை தொட்டியில் இருந்து கைப்பற்றியிருக்கிறார்கள். கொலை நடந்த ஆகஸ்ட் 5ம் தேதியும், அதற்கு முந்தைய ஒரு வாரத்திலும் சீதாலட்சுமி தன் மொபைல் போனில் இருந்து ரமேஷ் எண்ணை தவிர வேறு யாருக்கும் போன் செய்யவில்லை. ஆகஸ்ட் 5ம் தேதி காலையில் இருந்து மாலை வரை இருவரும் 900 வினாடி, 1,500 வினாடி, 700 வினாடி என்று இடைவிடாமல் பேசி உள்ளதை உறுதி செய்துள்ளனர். ரமேஷை கணவன் போல் எண்ணி வாழ்ந்த சீதாலட்சுமிக்கு, அவன் திருமணம் செய்து கொள்வது பிடிக்கவில்லை. கூடுமானவரைக்கும் சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்றுக் கொண்ட ரமேஷுக்கு, அவள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்த வெறுப்பு கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.

கொலை நடந்த இரவு 7.02 மணி முதல் 8.00 மணி வரை ரமேஷûக்கு, அவனது நண்பர்கள் தொடர்ந்து போன் செய்துள்ளனர். ஆனால், அவன் போனை எடுக்கவில்லை. இரவு 8.15 மணிக்கு, "மிஸ்டு காலில்' இருந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு ரமேஷ் பேசியுள்ளான். அதன் பிறகே நண்பர்களுடன் குடித்து விட்டு, பைக்கில் சென்று லாரியில் மோதி இறந்தான். கள்ளக்காதலி சீதாலட்சுமியை கொலை செய்த ரமேஷ், அடுத்த இரண்டரை மணி நேரத்தில் விபத்தில் இறந்தது ஆச்சரியமாகவே உள்ளது.

கணவனுக்கு துரோகம் இழைத்த சீதாலட்சுமி கொலையான இரண்டரை மணி நேரத்தில் நடந்த விபத்தில் ரமேஷ் உடல் நசுங்கி இறந்துள்ளான். கள்ளக்காதலுக்கு உதவிய ரமேஷின் நண்பன் மாதேஷ், சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி இறந்து விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, June 22, 2010

முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சி


போபால் விஷவாயுவால் இறந்தவர் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக நிவாரணம் தருவது மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, தனது பரிந்துரைகளை பிரதமர் மன்மோகனிடம் திங்கள்கிழமை அளித்துள்ளது. மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான இந்த அமைச்சர்கள் குழு, பத்து நாள்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி பிரதமர் கோரியிருந்தபோதிலும், ஒருநாள் முன்னதாகவே அளித்துள்ள வேகம் பாராட்டுக்குரியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், பரிந்துரைகள் அரசின் தவறுகளை மூடி மறைப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாக இருக்கிறது என்பதும் பல யூகங்களுக்கு இடமளிக்கும் வகையில் அமைந்திருப்பதையும் காணும்போது, வருத்தமே மிஞ்சுகிறது.முதலாவதாக, போபால் விஷவாயுவால் இறந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், நிரந்தரமான ஊனமுற்ற நபர்களுக்கு ரூ.5 லட்சம், ஓரளவு ஊனமுற்றோருக்கு ரூ.3 லட்சம் என்று இந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே இவர்கள் பெற்ற தொகையைக் கழித்துக்கொண்டு, இந்த நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று பரிந்துரையில் தெரிவித்துள்ளனர். அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்று- அதிக நிவாரணத்தொகை பெற்றுத்தருவது என்பது. அப்படியிருக்க, எதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட சொற்ப நிவாரணத் தொகையை இதில் கழிக்க வேண்டும் என்பது புரியவில்லை.மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, விஷவாயுவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் என்கிற செய்தி மட்டுமே உலகத்தாருக்குப் போய்ச் சேரும். ஆனால், அங்கே பாதிக்கப்பட்டவர்களிடம் "முன்பு பெற்ற உதவித்தொகை தொடர்பான ஆவணத்தைக் காட்டுங்கள், அதைக் கழித்துக்கொண்டு மீதிப் பணத்தைத் தருகிறோம்' என்று அரசு இயந்திரம் கறாராகச் சொல்லும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு எத்தனை பேர் பழைய நிவாரணத் தொகை விவரங்களைச் சான்றுகளுடன் வைத்திருப்பார்கள்? இத்தகைய சிக்கலுக்கே வழி இல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், அவர்கள் முன்பு பெற்ற நிவாரண உதவி எவ்வளவு என்றாலும், தற்போது கூடுதலாக அளிக்கப்படும் என்ற அறிவிப்பை அரசு செய்வதுதான் முறையானதாக இருக்கும்.இரண்டாவதாக, போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள சுமார் 300 டன் நச்சுப்பொருளை அகற்றி, அப்பகுதியில் மீண்டும் நல்வாழ்வுக்கான சூழலை ஏற்படுத்துவது என்பதும் இந்தக் குழுவின் நோக்கமாகும். இதற்காக ரூ.250 கோடி செலவிடப்படும் என்று இக்குழு தெரிவித்துள்ளது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் இந்தியப் பங்குகளை டெü நிறுவனம் வாங்கியபோது, நீதிமன்ற உத்தரவின்படி டெü நிறுவனம் இங்குள்ள நச்சுக்களை அகற்ற ரூ.100 கோடியை அரசுக்குச் செலுத்த வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் அத்தொகையைச் செலுத்தியதா, அல்லது அந்நிறுவனம் செலுத்திய தொகையோடு கொஞ்சம் அரசும் சேர்த்து இப்போது வழங்குகிறதா என்பதை விளக்குபவர்கள் யாருமில்லை. இந்த ஆலையில் உள்ள நச்சுக் கழிவுகள் அனைத்தையும் நீக்க வேண்டிய பொறுப்பையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் அல்லது அரசு நிர்ணயிக்கும் புதிய நிவாரணத் தொகையை அளிப்பதையும் டௌ நிறுவனம் ஏற்கும்படி செய்வதுதான் முறையாகும். ஆனால், அரசியல் காரணங்களுக்காக, குறிப்பாக ராஜீவ் காந்தியின் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக இந்தச் செலவுகளையும் கூடுதல் நிவாரண உதவிகளையும் அரசே ஏற்றுக்கொள்கிறது என்பதைத் தவிர, சொல்வதற்கு ஒன்றுமில்லை.இது தவிர, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய தலைவரும், பிணையில் வெளிவந்து நியூயார்க்கில் இருப்பவருமான வாரன் ஆன்டர்சனை இந்தியாவுக்கு கொண்டுவந்து விசாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும், பணியில் கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம் என்பதாக அளிக்கப்பட்ட தீர்ப்பில், இந்த வழக்கு கொலைவழக்கு என்பதாக மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்வது குறித்தும்கூட இந்தப் பரிந்துரைகள் சொல்கின்றன. இவற்றில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை இருக்கும் என்பது அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பொருத்துத்தான் தெரியும். அமைச்சர்கள் குழு முதல்நாள் கூடும் முன்பாகவே, போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அந்த இடத்தில் நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகளுக்காக திட்டக்குழு ரூ.982 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று செய்திகள் வெளியாகின. அரசு ஆவணங்களின்படி போபால் விஷவாயுவால் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 3,000 மட்டுமே. இவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் அளித்தாலும் ரூ.300 கோடி செலவாகும். ஊனமுற்றோர், சிறிதளவு ஊனமுற்றோருக்கு அளிக்கப்படும் நிவாரண உதவித்தொகைகளையும் சேர்த்தால் ரூ.500 கோடியை தாண்டாது. மேலும் டௌ நிறுவனம் தான் செய்ய வேண்டிய, செலவிட வேண்டிய தொகையும் -ரூ.250 கோடி- அரசாங்கமே அளித்துவிடுகிறது. இதர செலவுகளையும் சேர்த்தால், திட்டக் கமிஷன் மூலம் அரசு கொடுக்கும் ரூ.982 கோடி சரியாக இருப்பதைக் காணலாம்.மக்கள் பணத்தை வைத்து மக்கள் வாயை மூட முயற்சிக்கிறார்கள். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சி என்பதை யாராவது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சொல்லக் கூடாதா?