Friday, September 17, 2010

கல்நெஞ்சம்


உல்லாசத்துக்கு தடையாக இருந்ததால் குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா அரியூரை சேர்ந்தவர் இன்பநிலா (23). நேற்று முன்தினம் இரவு பெராம்பட்டு கிராமத்துக்கு குழந்தை சடலத்துடன் கதறியபடி வந்துள்ளார். ஊர் மக்கள் அவருக்கு ஆறுதல் கூறி, அண்ணாமலைநகர் காவல்துறைக்கு தகவல் தந்துள்ளனர். அவர்கள் வந்து விசாரித்தபோது, ‘‘குழந்தையுடன் சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகைக்கு வந்தாதகவும். உதவி செய்வதாக கூறிய 2 பேர்,தன்னை இருசக்கர வண்டியில் ஏற்றிச் சென்று கற்பழிக்க முயன்றனர் என்றும் மறுத்ததால் தன் குழந்தையை கொன்றுவிட்டனர்’’ என கூறியுள்ளார் இன்பநிலா. குழந்தை சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்பநிலாவையும் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் தனிப்படை அமைத்து வாலிபர்களை தேடி வந்தனர். இதற்கிடையே, இன்பநிலா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது, உண்மைகளை கக்கியுள்ளார். தன் கணவர் பாபு இறந்து 10 மாதங்கள் ஆகிறது என்றும் சென்னையில் கட்டிட வேலை செய்து வந்ததாகவும். அப்போது சிதம்பரத்தை அடுத்த கீழக்குண்டலபாடியை சேர்ந்த சந்துரு என்ற பாலசந்தருடன் (24) பழக்கம் ஏற்பட்டது என்றும். சில நாட்களுக்கு முன்பு அவர் ஊருக்கு வந்து விட்டதாகவும். அவரைப் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் சிதம்பரம் வந்தாகவும் கூறியுள்ளார் இருவரும் பழைய கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு சென்று. அங்கு உல்லாசமாக இருந்தபோது குழந்தை கத்தியுள்ளது சத்தம் கேட்டு யாராவது வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் இருவரும் குழந்தையை காலால் மிதித்து கொன்றுள்ளார்கள். கள்ளக்காதலன் பாலசந்தரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளக்காதல் மோகத்தில் பெற்ற குழந்தையையே கல்நெஞ்சம் படைத்த தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment