Sunday, May 13, 2012

மாமனார் குளோஸ்


திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களுடன் சுதர்சனின் பெற்றோர் செல்லையன்- ரெத்தினபாய் ஆகியோரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

வீட்டில் தனியாக இருந்த விஜயாவுடன் அதேபகுதியை சேர்ந்த வாலிபர் எட்வின் ஜிவி என்பவருக்கு தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலர்கள் இருவரும் இரவு நேரத்தில் விஜயாவின் வீட்டு மாடியில் ரகசியமாக சந்தித்து உறவாடி மகிழ்ந்தனர்.

கடந்த வாரம் சுதர்சன் பெங்களூரில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்தார். கடந்த 9-ந் தேதி தான் அவர் விடுமுறை முடிந்து பெங்களூர் புறப்பட்டார். இதனால் விஜயாவுக்கு கள்ளக்காதலன் எட்வின் ஜிவியை சந்திக்க முடியாமல் இருந்தது. கணவன் பெங்களூர் புறப்பட்ட தகவலை அவர் எட்வின் ஜிவிக்கு தெரிவிக்க அவர் 10-ந் தேதி இரவு விஜயா வீட்டுக்கு வந்தார்.

வழக்கம் போல பின்புறக் கதவை திறந்து கொண்டு மேல்மாடிக்கு சென்று உல்லாசமாக இருந்தனர். அப்போது இருவருக்குமிடையே நடந்த பேச்சு சத்தம் கேட்டு விஜயாவின் மாமனார் செல்லையன் திடீரென விழித்துக் கொண்டார்.

மேல்மாடியில் ஆண் குரல் கேட்பதை உணர்ந்த அவர் அங்கு சென்றார். அறைக்குள் தனது மருமகளும், வாலிபர் ஒருவரும் அரைகுறை உடையில் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்தார். அதிர்ச்சியில் உறைந்து போன அவர் அலறினார். சத்தம்கேட்டு திரும்பி பார்த்த விஜயாவும் எட்வின் ஜிவியும் அறைக்கதவின் அருகே மாமனார் நிற்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனே எட்வின்ஜிவி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவர் கதவருகே நின்ற செல்லையனை மிதித்து தள்ளி விட்டு தப்பி ஒட முயன்றார்.

இதற்கிடையே மேல்மாடியில் கேட்ட அலறல் சத்தத்தால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். செல்லையனின் மனைவி ரெத்தினபாயும், கணவனின் கதறல் கேட்டு மேல்மாடிக்கு ஓடினார். அங்கு செல்லையன் கீழே விழுந்து கிடப்பதையும், அருகில் மருமகளும், இன்னொரு வாலிபரும் நிற்பதைக் கண்டார். அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்த ரெத்தினபாய் கணவரை மட்டும் கைத்தாங்கலாக கீழே அழைத்து வந்து நாற்காலியில் உட்கார வைத்தார்.

ஆனால் நாற்காலியில் இருந்த செல்லையன் சிறிது நேரத்திலேயே மார்பை பிடித்தபடி இறந்து போனார். இதற்குள் தகவலறிந்து திருவட்டார் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் விஜயாவையும், அவரது கள்ளக்காதலன் எட்வின் ஜிவியையும் பிடித்தனர்.

இந்த தகவல் பெங்களூரில் இருந்த சுதர்சனுக்கும் தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலையே அவர் அங்கிருந்து ஊருக்கு வந்தார். சம்பவத்தை முழுமையாக தெரிந்து கொண்ட அவர் மனைவி இனி வேண்டாம் என்று உறவினர்களிடம் கூறினார். சுதர்சனின் தாய் ரெத்தினபாய் தனது கணவரின் சாவுக்கு மருமகளும், அவரது கள்ளக்காதலனுமே காரணம் என்றும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். அதில் விஜயாவும், எட்வின் ஜிவியும் தாக்கியதில் தான் செல்லையன் இறந்தார் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து போலீசார் செல்லையன் மரணத்தை சந்தேகச்சாவு என்று வழக்கு பதிவு செய்து எட்வின்ஜிவி, விஜயா இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன செல்லையனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் அறிக்கை கிடைத்த பின்பே செல்லையன் எப்படி இறந்தார்? எட்வின் ஜிவி தாக்கியதில் அவர் இறந்தாரா? என்பது தெரிய வரும்.

அற்ப சந்தோஷத்திற்காக அடுத்தவர் மனைவியுடன் உல்லாசமாக இருந்து வழக்கில் சிக்கிய எட்வின்ஜிவி எம்.காம். பட்டதாரி ஆவார். இவருக்கு பெற்றோர் சமீபத்தில் தான் பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்தனர்.

குடும்ப வாழ்வை தொடங்க இருந்த நேரத்தில் அவர் வழக்கில் சிக்கிக்கொண்டது இது போல தடம் மாறுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

நன்றி - மாலைமலர்

No comments:

Post a Comment