Showing posts with label illegal sex. Show all posts
Showing posts with label illegal sex. Show all posts

Sunday, May 13, 2012

மாமனார் குளோஸ்


திருவட்டாரை அடுத்த கண்ணனூர் சங்கரன் தோட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன். ராணுவ வீரர். பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களுடன் சுதர்சனின் பெற்றோர் செல்லையன்- ரெத்தினபாய் ஆகியோரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

வீட்டில் தனியாக இருந்த விஜயாவுடன் அதேபகுதியை சேர்ந்த வாலிபர் எட்வின் ஜிவி என்பவருக்கு தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலர்கள் இருவரும் இரவு நேரத்தில் விஜயாவின் வீட்டு மாடியில் ரகசியமாக சந்தித்து உறவாடி மகிழ்ந்தனர்.

கடந்த வாரம் சுதர்சன் பெங்களூரில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்தார். கடந்த 9-ந் தேதி தான் அவர் விடுமுறை முடிந்து பெங்களூர் புறப்பட்டார். இதனால் விஜயாவுக்கு கள்ளக்காதலன் எட்வின் ஜிவியை சந்திக்க முடியாமல் இருந்தது. கணவன் பெங்களூர் புறப்பட்ட தகவலை அவர் எட்வின் ஜிவிக்கு தெரிவிக்க அவர் 10-ந் தேதி இரவு விஜயா வீட்டுக்கு வந்தார்.

வழக்கம் போல பின்புறக் கதவை திறந்து கொண்டு மேல்மாடிக்கு சென்று உல்லாசமாக இருந்தனர். அப்போது இருவருக்குமிடையே நடந்த பேச்சு சத்தம் கேட்டு விஜயாவின் மாமனார் செல்லையன் திடீரென விழித்துக் கொண்டார்.

மேல்மாடியில் ஆண் குரல் கேட்பதை உணர்ந்த அவர் அங்கு சென்றார். அறைக்குள் தனது மருமகளும், வாலிபர் ஒருவரும் அரைகுறை உடையில் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்தார். அதிர்ச்சியில் உறைந்து போன அவர் அலறினார். சத்தம்கேட்டு திரும்பி பார்த்த விஜயாவும் எட்வின் ஜிவியும் அறைக்கதவின் அருகே மாமனார் நிற்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனே எட்வின்ஜிவி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவர் கதவருகே நின்ற செல்லையனை மிதித்து தள்ளி விட்டு தப்பி ஒட முயன்றார்.

இதற்கிடையே மேல்மாடியில் கேட்ட அலறல் சத்தத்தால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். செல்லையனின் மனைவி ரெத்தினபாயும், கணவனின் கதறல் கேட்டு மேல்மாடிக்கு ஓடினார். அங்கு செல்லையன் கீழே விழுந்து கிடப்பதையும், அருகில் மருமகளும், இன்னொரு வாலிபரும் நிற்பதைக் கண்டார். அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்த ரெத்தினபாய் கணவரை மட்டும் கைத்தாங்கலாக கீழே அழைத்து வந்து நாற்காலியில் உட்கார வைத்தார்.

ஆனால் நாற்காலியில் இருந்த செல்லையன் சிறிது நேரத்திலேயே மார்பை பிடித்தபடி இறந்து போனார். இதற்குள் தகவலறிந்து திருவட்டார் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் விஜயாவையும், அவரது கள்ளக்காதலன் எட்வின் ஜிவியையும் பிடித்தனர்.

இந்த தகவல் பெங்களூரில் இருந்த சுதர்சனுக்கும் தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலையே அவர் அங்கிருந்து ஊருக்கு வந்தார். சம்பவத்தை முழுமையாக தெரிந்து கொண்ட அவர் மனைவி இனி வேண்டாம் என்று உறவினர்களிடம் கூறினார். சுதர்சனின் தாய் ரெத்தினபாய் தனது கணவரின் சாவுக்கு மருமகளும், அவரது கள்ளக்காதலனுமே காரணம் என்றும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். அதில் விஜயாவும், எட்வின் ஜிவியும் தாக்கியதில் தான் செல்லையன் இறந்தார் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து போலீசார் செல்லையன் மரணத்தை சந்தேகச்சாவு என்று வழக்கு பதிவு செய்து எட்வின்ஜிவி, விஜயா இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன செல்லையனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் அறிக்கை கிடைத்த பின்பே செல்லையன் எப்படி இறந்தார்? எட்வின் ஜிவி தாக்கியதில் அவர் இறந்தாரா? என்பது தெரிய வரும்.

அற்ப சந்தோஷத்திற்காக அடுத்தவர் மனைவியுடன் உல்லாசமாக இருந்து வழக்கில் சிக்கிய எட்வின்ஜிவி எம்.காம். பட்டதாரி ஆவார். இவருக்கு பெற்றோர் சமீபத்தில் தான் பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்தனர்.

குடும்ப வாழ்வை தொடங்க இருந்த நேரத்தில் அவர் வழக்கில் சிக்கிக்கொண்டது இது போல தடம் மாறுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

நன்றி - மாலைமலர்

Saturday, April 21, 2012

பக்கா ப்ளான்-ப்ளான் பக்கா



நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் ரெயில்வே காலனியை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது23). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானில் உள்ள உறவினரான தங்கவேலு என்பவரின் மகள் சத்யா (20). என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் கொடைக்கானலில் வசித்து வந்தனர்.

சரவணக்குமார் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவிற்காக கடந்த 4-ந்தேதி சரவணக்குமார் தனது மனைவியுடன் நெல்லையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார். கடந்த 9-ந்தேதி காலை தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற சரவணக்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை பரமசிவன் நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில் சரவணக்குமாரை அவரது மனைவியின் காதலன் கனகராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடித்து விசாரித்தனர். அதில் சரவணக்குமாரை கொல்ல அவரது மனைவி சத்யா மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரது திட்டத்தின் படி சரவணக்குமாரை, கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் காரில் கடத்தி சென்று கழுத்தை நெறித்து கொன்று, உடலை கொடைக்கானல் மயிலாடும் பாறை மலையில் இருந்து வீசியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மலையடி வாரத்தில் அழுகிய நிலையில் கிடந்த சரவணக்குமாரின் உடலை மீட்டனர். சரவணக்குமார் கொலை தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிந்து சத்யா, அவரது காதலன் கனகராஜ், நண்பர்கள் ராஜேஷ் குமார் (23), மதன் (33), ரஞ்சித் குமார் (19) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

கனகராஜ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் சரவணக்குமாரை கடத்தி கொல்ல அவரது மனைவி சத்யாவே திட்டம் தீட்டி தன்னிடம் கூறியதால் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொன்றதாக கூறியுள்ளார். காதலன் மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் சரவணக்குமாரை தீர்த்து கட்டியது பற்றி அவரது மனைவி சத்யா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திருமணத்திற்கு முன்பு சத்யாவை காதலித்த கார் டிரைவர் கனகராஜ், அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சத்யாவின் தந்தை மனைவியின் உறவினர் மகனான சரவணக்குமாரை திருமணம் செய்து வைத்து விட்டார். சரவணக்குமாரை திருமணம் செய்து கொண்டாலும் அவரை பிரிந்து சென்று காதலனுடன் வாழ சத்யா தயாராக இருந்துள்ளார்.

இதனால் காதலன் கனகராஜுடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் தான் திருமணமான புதிதில் காதலன் கனகராஜுடன் சத்யா ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசில் கடத்தல் புகார் கொடுத்ததால் சத்யா மீண்டும் திரும்பி வந்தார். அப்போதும் தனது காதலனுடன் சத்யா பேசி வந்துள்ளார். வாழ்க்கையில் தாங்கள் இணைவதற்கு தடையாக இருப்பது சரவணக்குமார்தான் என அவர்கள் கருதினர்.

ஆகையால் சரவணக்குமாரை ரகசியமாக கொலை செய்து விட்டால் வாழ்க்கையில் சேர்ந்து விடலாம் என இருவரும் நினைத்தனர். ஆகையால் அதற்கான நேரத்தை சத்யாவும், அவரது காதலனும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தான் சரவணக்குமார் மனைவி சத்யாவை நெல்லையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

தனது கணவரை தீர்த்து கட்ட இதுதான் சரியான தருணம் என நினைத்த சத்யா தனது கணவருடன் நெல்லைக்கு வந்திருப்பது குறித்து காதலன் கனகராஜுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி கனகராஜ் தனது நண்பர்களுடன் 8-ந்தேதி இரவு நெல்லை வந்தார்.

9-ந்தேதி காலை சத்யா தனது கணவரிடம் தன்னுடைய நண்பர்கள் சிலர் நம்மை பார்க்க நெல்லை வந்திருப்பதாகவும், வண்ணார்பேட்டையில் வீடு தெரியாமல் நின்று கொண்டிருப்பதாகவும் அவர்களை அழைத்து வருமாறு கூறினார். இதனை உண்மை என நம்பிய சரவணக்குமார் அங்கு சென்றார்.

அப்போது கனகராஜ் உள்ளிட்டோர் சரவணக்குமாரை கடத்தி கொன்று உடலை சாக்கு பையில் கட்டி கொடைக்கானல் மயிலாடும் பாறை மலை உச்சிக்கு தூக்கி சென்று, அங்கிருந்து பள்ளத்தில் தூக்கி வீசியுள்ளனர். அதன் பிறகு திட்டம் வெற்றிகரமாக முடிந்து விட்டதாக சத்யாவிடம் போனில் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இதனால் நிம்மதி அடைந்த சத்யா அதனை வெளிக்காட்டாமல் இருந்துள்ளார். மாயமான சரவணக்குமாரை அவரது குடும்பத்தினர் தேடிய போது தனக்கு எதுவும் தெரியாதது போல் சத்யா இருந்துள்ளார். மொத்தத்தில் காதலனுடன் சேர தடையாக இருந்ததால் கணவரை தீர்த்துக்கட்ட உதவியதாக சத்யா கூறியிருந்தார். இவ்வாறு சத்யா வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறினர்.


நன்றி - மாலைமலர்


Tuesday, November 16, 2010

16 வயதினிலே


ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஆதிலாபானு(24). இவர் குப்பான்வலசையைச் சேர்ந்த முத்து மகன் முத்துச்சாமியை காதலித்து திருமணம் செய்தார். இதற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் குப்பான்வலசையில் குடியேறினர். முத்துச்சாமி மதம் மாறி, அகமது என, பெயரை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு முகமது அஸ்லம்(7) அஜிராபானு(5) என்ற குழந்தைகள் உள்ளனர்.

வேலைக்காக முத்துச்சாமி மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே மனகசப்பு ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன், தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரம் பாரதிநகரில் ஆதிலாபானு குடியேறினார். கடந்த நவ., 8ம் தேதி ஆதிலாபானு, குழந்தைகள் மாயமாகினர். ஹம்சத்நிஷா கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலை மதுரை நோக்கிச் செல்லும் வழியில் கட்டக்குளம் பிரிவு தரைப்பாலத்தின் கீழ், நேற்று அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு பிணமாக கிடந்தார். அருகே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் விராலிபட்டி பிரிவு பாலத்தின் கீழ், வெள்ளை வேட்டியில் சுருட்டி கட்டப்பட்ட நிலையில் குழந்தைகள் முகமது அஸ்லம், அஜிராபானுவின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன், பானுவின் தாயை அழைத்துக்கொண்டு வாடிப்பட்டி சென்றார்.

கொலை சம்பவத்தில், கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட மோதலே காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நான்கிற்கும் மேற்பட்டோர் பானுவுடன் தொடர்பு வைத்திருப்பதாக தெரிவதால், இதில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனது 16வது வயதில் வேறுபிரிவை சேர்ந்த முத்துச்சாமியை ஆதிலா பானு காதலித்ததற்கு ஊரார் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மறைந்த மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க., செயலர் சீனிக்கட்டியின் கார் டிரைவராக முத்துச்சாமி பணியாற்றினார். சீனிகட்டியின் தாய் பசீர் அம்மாள் இவர்களது திருமணத்தை நடத்திவைத்தார். மைனர் வயதில் காதல் வசப்பட்ட ஆதிலா பானுவுக்கு, நாட்கள் கடந்த போது காதல் கசந்தது. கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

Saturday, November 13, 2010

சிந்து சமவெளி

தேனி மாவட்டம், போடி அருகே வாழையாத்துப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (50). மகன் கார்த்திக் (25). இவரது மனைவி ஏத்தக்கோயில் பழனிச்சாமி மகள் பவுன்(23). இரண்டு ஆண்டுகளுக்கு முன் கார்த்திக் தொழில் செய்ய, குடும்பத்துடன் மங்களூரு சென்றார். அங்கு பவுனுக்கும், கருப்பையாவிற்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதை கார்த்திக் கண்டித்தார். தொடர்பு நீடித்ததால், கார்த்திக் கடந்த ஆண்டு போடி அருகே, மீனாட்சிபுரம் கோவிலில் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்தார்.

இந்நிலையில், அவரது உடல் கருகிய நிலையில் கோவில் கருவறைக்குள் கிடந்தது. போடி இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படை, ஆறு மாதத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். கருப்பையா, பழனிச்சாமி, பவுன் ஆகியோரை கைது செய்தனர். மங்களூரில் இருந்து கோபித்துக் கொண்டு வந்த கார்த்திக்கை, கருப்பையா பின் தொடர்ந்து வந்து சமரசம் செய்தார். பழனிச்சாமி முன்னிலையில், கள்ளத்தொடர்பினை விட்டு விடுவதாக கூறியும், ஏற்க மறுத்து கார்த்திக் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த கருப்பையா, பழனிச்சாமி சேர்ந்து கார்த்திக்கை வெட்டி கொன்று, உடலை கோவில் கருவறைக்குள் வைத்து எரித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். சமீபத்தில் வந்த சிந்து சமவெளி  திரைபடம் போல் உள்ளது.  



ஆயிரத்தில் ஒருவன்





Tuesday, November 9, 2010

கள்ளக்காதல்


பாளை அருகே உள்ள மேலபுத்தனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாபிள்ளை. இவரது மகள் சுதா என்ற சுப்புலட்சுமி (30). இவரது கணவர் மாரியப்பன் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சுதா தனது 2 பெண் குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கூலிவேலை செய்து வந்த சுதாவுக்கு கீழப்புத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பார்வதி (வயது 35) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பார்வதிக்கு திருமணமாகி மாரிசெல்வி என்ற மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த விசயம் தெரிந்து ஆத்திரமடைந்த அய்யாபிள்ளை, மகள் சுதாவை கண்டித்தார்.

இதனால் கள்ளக்காதலியை சந்திக்க முடியாமல் தவித்த பார்வதி, நேற்று நள்ளிரவு 11 மணிக்கு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது சுதா வீட்டிற்குள் நுழைந்தார். கள்ளக்காதலனை எதிர்பார்த்திருந்த சுதா அவரை வீட்டின் மாடி அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர்.

நள்ளிரவு மாடியில் சத்தம் கேட்பதை அறிந்த சுதாவின் தம்பி மாரி செல்வம், தந்தை அய்யாபிள்ளை, தாயார் செல்லம்மாள் ஆகியோரை எழுப்பி மாடிக்கு சென்றார். அங்கு அவர்கள் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஆத்திரமடைந்த அவர்கள் அருகில் கிடந்த இரும்பு பட்டை, மண்வெட்டி கணை ஆகியவற்றால் பார்வதியை சரமாரி தாக்கினார்கள். அவரை அடிக்காதீர்கள் என்று தடுத்த சுதாவுக்கும் சரமாரி அடி விழுந்தது. இதில் பார்வதி, சுதா ஆகியோரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. நள்ளிரவு நடந்த இந்த சம்பவத்தால், அந்தப்பகுதியில் ஏராளமானவர்கள் கூடினார்கள்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், செந்தட்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிய கள்ளக்காதல் ஜோடியை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே பார்வதி இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சுதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆயிரத்தில் ஒருவன்





Friday, October 29, 2010

கொலையும் செய்வாள்......

கிருஷ்ணகிரி அருகே 2 நாட்களுக்கு முன்பு இரவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக சென்ற காரை நிறுத்தினார்கள்.

அந்த கார் நிற்காமல் சென்றதால் போலீசார் விடாமல் துரத்தினார்கள். வேகமாக சென்ற கார் நாகரசம்பட்டி அருகே ரோட்டோரம் இறங்கியது. அந்த வேளையில் காரில் வந்தவர்கள் அதில் இருந்து இறங்கி தப்பியோடினார்கள்.

விரட்டி சென்ற போலீசார் காரை சோதனையிட்ட போது காருக்குள் ஒரு ஆண் பிணம் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளியை சேர்ந்த பசுவராஜ் (வயது 28) என்பது உறுதி செய்யப்பட்டது.

பசுவராஜை அவரது மனைவி ராஜேஸ்வரி, மாமியார் சவுந்தரி, கள்ளக்காதலன் வெங்கடாசலம் ஆகியோர் கொலை செய்துள்ளது வெட்ட வெளிச்சம் ஆனது. மேலும் பிணத்தை ராயக்கோட்டை ரெயில்வே பாதையில் வீசிவிட எடுத்துச்செல்லும் போது போலீசார் துரத்தியதால் பாதை மாறி சென்றதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் கொலையுண்ட பசுவராஜின் மனைவி ராஜேஸ்வரி, அவரது தாயார் சவுந்தரி, கள்ளக்காதலன் வெங்கசாடலம், அவரது நண்பர் சந்தோஷ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கைதானவர்கள் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில்

பசுவராஜூக்கும், ராஜேஸ்வரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆனால் திருமணத்துக்கு முன்பே, ராஜேஸ்வரிக்கும், வெங்கடாசலத்துக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. திருமணத்துக்கு பின்பும், கள்ளக்காதலை இருவரும் வளர்த்துள்ளனர்.

இதையறிந்த பசுவராஜ், மனைவி மற்றும் கள்ளக்காதலன் வெங்கடாசலத்தை கண்டித்தார். இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு வெங்கடாசலத்துடன் ராஜேஸ்வரி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை போலீசில் பசுவராஜ் கொடுத்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜேஸ்வரியை கணவர் பசுவராஜுடன் சேர்த்து வைத்தனர்.

ஆனால் வெங்கடாசலத்துடன் மனைவி ராஜேஸ்வரி ஓடிய சம்பவம், பசுவராஜுக்கு பயங்கர ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் மனைவியை தினமும் அடித்து சித்ரவதை செய்தார். இதை தட்டிக்கேட்ட தாய் சவுந்தரியையும் அடித்தார். இதையடுத்து அவரது கொடுமை தாங்காமல் பசுவராஜை கொலை செய்ய தாய், மகள் மற்றும் கள்ளக்காதலன் ஆகியோர் திட்டம் தீட்டினார்கள்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாப்பாட்டில் 3 முறை விஷம் வைத்து கொடுத்தனர். ஆனால் அவர் சாகாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்தனர். இந்த கொலை முயற்சி சமீபத்தில் பசுவராஜுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இதுகுறித்து ஓசூரில் உள்ள தனது அண்ணனுக்கு தெரிவித்தார். இதுகுறித்து பேசுவதற்கு ஓரிரு நாளில் வருவதாக அவரது அண்ணன் கூறினார்.

அண்ணன் வந்தவுடன், இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக பசுவராஜ் அனைவரையும் மிரட்டினார். இதனால் பயந்து போன அவர்கள், பசுவராஜை கொலை செய்ய மீண்டும் முடிவு செய்தனர். இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த பசுவராஜை, சுடிதார் துப்பட்டாவால் ராஜேஸ்வரி, அவரது தாய் சவுந்தரி ஆகிய 2 பேரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி படுகொலை செய்தனர்.

பின்னர் இதுகுறித்து கள்ளக்காதலன் வெங்கடாசலத்திடம் கூறினர். வெங்கடாசலம் தனது நண்பர் சந்தோஷ்குமாருடன் வந்தார். பின்னர் உடலை ராயக்கோட்டை ரெயில்வேகேட் அருகே வீசிவிட்டு செல்லலாம் என்று காரில் வந்த போது போலீசார் விரட்டினர். தப்பிவிட வேண்டும் என்று கருதி காரை திருப்பத்தூர் ரெயில்வே கேட்டுக்கு வேகமாக ஓட்டினார்கள். ஆனால் போலீசார் அதற்குள் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர்.

Tuesday, October 19, 2010

காவல் காதல்

நெல்லை அருகே இரண்டு கள்ளக்காதலிகளை கொடூரமாக கொலை செய்த ஆயுதப்படை போலீஸ்காரர், தாமும் தற்கொலை செய்து கொண்டார்.நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு ஆயுதப்படை போலீசின் 9ம் பட்டாலியன் படையில் ஏட்டாக பணிபுரிபவர் உமாமகேஸ்வரி (36). 1997 முதல் தற்போது வரை அங்கேயே பணியாற்றுகிறார். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பணகுடி, கோரி காலனியாகும். இவரது கணவர் இசக்கியப்பன் (40), மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் ஏட்டாக உள்ளார். தற்போது தூத்துக்குடியில் பணியாற்றுகிறார்.

மணிமுத்தாறு பட்டாலியன் அருகே பழைய குடியிருப்பில் தங்கி, பணிக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு சுதர்சன் (9) என்ற மகனும், சுபத்ரா (5) என்ற மகளும் உள்ளனர். இருவரும் அங்குள்ள பள்ளியில் படிக்கின்றனர். உமாமகேஸ்வரியின் தாயார் மரியதங்கம் இவர்களுடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் உமாமகேஸ்வரி, பாதுகாப்பு பணிக்கு செல்வதாக கூறி, பட்டாலியன் அலுவலகத்திற்கு சென்றார்; நேற்று காலை வீடு திரும்பவில்லை. பட்டாலியன் அலுவலகம் அருகே இடிந்து போன கட்டடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அந்த வழியே சென்ற பெண் காவலர் ஒருவர் பார்த்து, பட்டாலியன் அலுவலகத்திற்கு தகவல் கூறினார்.

இறந்து கிடந்த உமாமகேஸ்வரியின் வலதுதாடையில் பலத்த அரிவாள் வெட்டு இருந்தது. உடலில் வேறு சில காயங்களும் இருந்தன. நள்ளிரவில் கொலை நடந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ரத்தம் காய்ந்திருந்தது. போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் கொடூரமான கொலை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் துப்பறியும் நாய், தடயவியல் நிபுணர்கள் விசாரணையில் ஈடுபட்டனர்.சம்பவம் குறித்து உமாமகேஸ்வரியின் தாயார் தந்த புகாரில், மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் காவலராக பணியாற்றும் இசக்கிமுத்து என்பவர் உமாமகேஸ்வரியை தம்முடன் வாழ வருமாறு அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும், அவர் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இசக்கிமுத்து (32) நெல்லை மாவட்டம் கோபால சமுத்திரத்தை சேர்ந்தவர். மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9வது பட்டாலியனில் போலீஸ்காரரான இவருக்கு திருமணமாகி, மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால், இவர் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.இசக்கிமுத்து, கீதா (39) என்ற பெண்ணுடனும் தொடர்பு வைத்திருந்தார். இசக்கிமுத்துவின் உறவினரான கீதாவின் கணவர் பச்சமுத்து, அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர். இவர், அண்மையில் வெளிநாடு சென்று விட்டார். அதன் பின், கீதா அவரது தாயின் சொந்த ஊரான திட்டுவிளையில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். இசக்கிமுத்து அடிக்கடி இங்கு வந்து, கீதாவை சந்தித்து செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவில் பெண் போலீஸ் உமாமகேஸ்வரியை வெட்டி கொன்று விட்டு, இசக்கிமுத்து பைக்கில் நள்ளிரவில் பூதப்பாண்டிக்கு வந்தார். இங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பைக்கை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்துக்கு சென்று, மொபைல்போனில் அங்கு வரும்படி கீதாவை அழைத்துள்ளார். ஆனால் கீதா செல்ல மறுத்தார்.மறுநாள் அதிகாலை, கீதாவின் வீட்டுக்கு சென்ற இசக்கிமுத்து, அவரை பாழடைந்த கட்டடத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, கீதாவை சுட்டுக் கொன்றுவிட்டு, இசக்கிமுத்து தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இசக்கிமுத்து மணிமுத்தாறு பட்டாலியனில் துப்பாக்கிகளை பாதுகாக்கும் பிரிவில் வேலை பார்த்து வந்தார். இதை பயன்படுத்திய அவர், ஒரு துப்பாக்கியை திருடிக் கொண்டு வந்தார். அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து 26 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கொலை செய்யப்பட்ட கீதாவுக்கு சுருதி (15) என்ற மகளும், திவாகர் (13), பிரபாகர் (13) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

Thursday, October 7, 2010

உல்லாசம்


மாதவரம் பொன்னியம் மன் மேடு சந்திரபிரபு காலனியைச் சேர்ந்தவர் சுந்தரவதனம். கால்டாக்சி டிரைவர். இவரது மனைவி சாந்தி (42). ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன் கல்லூரியில் படித்து வருகிறார். சுந்தரவதனம் வேலைக்கு சென்ற சமயத்தில் வீட்டில் சாந்தி படுக்கையறையில் பிணமாக கிடந்தார்.

இந்த மர்ம சாவு குறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்தினர்.

இதில் சாந்தியின் கள்ளக் காதலன் லோகநாதன் (43) என்பவர் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது. இவர் புழல் காவாங்கரையைச் சேர்ந்தவர். மெக்கானிக்கடை வைத்துள்ளார்.

டிரைவர் சுந்தரவதனம் தனது காரை ரிப்பேர் பார்க்க லோகநாதனின் மெக்கானிக் கடைக்கு கொண்டு செல்வதுண்டு. அப்போது அவரது மனைவியும் உடன் சென்று வருவார்.

இதில் மெக்கானிக் லோகநாதனுக்கும், சாந்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

சுந்தரவதனம் வீட்டில் இல்லாத சமயங்களில் லோகநாதன், சாந்தியை சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளார். சாந்தியின் மகள் திருமணத்துக்கு ரூ. 1 லட்சம் கடனும் கொடுத்துள்ளார்.

இந்த பணத்தை லோகநாதன் திருப்பி கேட்டிருக்கிறார். இப்போது பணம் இல்லை என்று சாந்தி கூறியதால் ஆவேசத்தில் சேலையால் கழுத்தை நெரித்து சாந்தியை கொன்று விட்டு ஓடி விட்டார்.

சாந்தியின் கணவரிடம் போலீசார் விசாரிக்கும் போது லோகநாதன் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார் என்று கூறியதால் சந்தேகப்பட்டு போலீசார் லோகநாதனை பிடித்து விசாரித்தனர். அப்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையொட்டி லோகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Friday, September 17, 2010

கல்நெஞ்சம்


உல்லாசத்துக்கு தடையாக இருந்ததால் குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா அரியூரை சேர்ந்தவர் இன்பநிலா (23). நேற்று முன்தினம் இரவு பெராம்பட்டு கிராமத்துக்கு குழந்தை சடலத்துடன் கதறியபடி வந்துள்ளார். ஊர் மக்கள் அவருக்கு ஆறுதல் கூறி, அண்ணாமலைநகர் காவல்துறைக்கு தகவல் தந்துள்ளனர். அவர்கள் வந்து விசாரித்தபோது, ‘‘குழந்தையுடன் சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகைக்கு வந்தாதகவும். உதவி செய்வதாக கூறிய 2 பேர்,தன்னை இருசக்கர வண்டியில் ஏற்றிச் சென்று கற்பழிக்க முயன்றனர் என்றும் மறுத்ததால் தன் குழந்தையை கொன்றுவிட்டனர்’’ என கூறியுள்ளார் இன்பநிலா. குழந்தை சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்பநிலாவையும் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் தனிப்படை அமைத்து வாலிபர்களை தேடி வந்தனர். இதற்கிடையே, இன்பநிலா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது, உண்மைகளை கக்கியுள்ளார். தன் கணவர் பாபு இறந்து 10 மாதங்கள் ஆகிறது என்றும் சென்னையில் கட்டிட வேலை செய்து வந்ததாகவும். அப்போது சிதம்பரத்தை அடுத்த கீழக்குண்டலபாடியை சேர்ந்த சந்துரு என்ற பாலசந்தருடன் (24) பழக்கம் ஏற்பட்டது என்றும். சில நாட்களுக்கு முன்பு அவர் ஊருக்கு வந்து விட்டதாகவும். அவரைப் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் சிதம்பரம் வந்தாகவும் கூறியுள்ளார் இருவரும் பழைய கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு சென்று. அங்கு உல்லாசமாக இருந்தபோது குழந்தை கத்தியுள்ளது சத்தம் கேட்டு யாராவது வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் இருவரும் குழந்தையை காலால் மிதித்து கொன்றுள்ளார்கள். கள்ளக்காதலன் பாலசந்தரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளக்காதல் மோகத்தில் பெற்ற குழந்தையையே கல்நெஞ்சம் படைத்த தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Friday, September 10, 2010

துரோகம்


திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டில், பழனிசாமி தோட்டத்தின் வேலி ஓரம், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, 32 வயது மதிக்கத்தக்க பெண் உடல், கொலை செய்யப்பட்டு கிடந்தது. பெருமாநல்லூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரித்தனர். திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த அன்பு தண்டபாணி மனைவி சீதாலட்சுமி (32) என்பது தெரிந்தது. இத்தம்பதியருக்கு ஏழு வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், தன் மனைவியை 5ம் தேதி முதல் காணவில்லை என கணவர் அன்பு தண்டபாணி, அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனால், சீதாலட்சுமி, 5ம் தேதியே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்து விசாரணையை துவக்கினர்.

அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளியை தேடினர். கொலையுண்ட சீதாலட்சுமியின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை துவங்கியது. ஆரம்பத்தில் குழம்பிய போலீசாருக்கு மொபைல் போன் மூலம் கிடைத்த விவரங்கள் விசாரணையை வேகப்படுத்தியது. சீதாலட்சுமி போனுக்கு, ஆக., 5ம் தேதி காலை முதல் மாலை 6.00 மணி வரை ஒரே எண்ணில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வந்துள்ளது; அந்த எண்ணுக்குரிய நபரின் முகவரி குறித்து விசாரித்தனர். அந்த எண், 15 வேலம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் ரமேஷ் என்பது தெரிந்தது. போலீசார், ரமேஷ் வீட்டுக்குச் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. அதே, ஆகஸ்ட் 5ம் இரவு 10.00 மணிக்கு தன் நண்பர் மாதேஷ் உடன் பைக்கில் சென்ற ரமேஷ், அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. அவினாசி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருந்தனர். விபத்தில் பலியான ரமேஷுக்கும், கொலையான சீதாலட்சுமிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை துவங்கியது.

விபத்தில் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதேஷிடம், போலீசார் தீவிரமாக விசாரித்தனர். ஆனால், விசாரணையில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்க முடியாதவாறு மாதேஷ், கோமா நிலைக்கு சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியுற்ற போலீசார், சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில் விசாரித்தனர். அதில், பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகின.

கொலையான சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில், லேபர் கான்ட்ராக்டராக ரமேஷ் பணியாற்றியுள்ளான். ஓராண்டாக காதலித்த இருவரும், ஊட்டி, கொடைக்கானல் என்று ஜாலியாக சுற்றியுள்ளனர். ரமேஷை தன் கணவனாகவே பாவித்த சீதாலட்சுமி, அவனின் தங்கை திருமணத்துக்கு பணமும், செலவுக்கு தன் நகைகளையும் கொடுத்துள்ளார். ரமேஷ் வீட்டில், அவனுக்கு பெண் பார்க்கத்துவங்கியதும் சீதாலட்சுமியை கழற்றி விட திட்டமிட்டான். பல நேரத்தில் இதுகுறித்து ரமேஷ் பேசியபோது, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சீதாலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்ட ரமேஷ், ஆகஸ்ட் 5ம் தேதி அவளை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறி, பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டுக்கு அழைத்துச் சென்றான். பொங்குபாளையம் - கணக்கம்பாளையத்தில் உள்ள பழனிசாமி தோட்டம் பகுதிக்கு அழைத்து வந்தான். அங்கு ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த கத்தியால், அன்று இரவு 7.45 மணிக்கு அவளது வயிறு மற்றும் கழுத்தில் குத்தியுள்ளான். அவள் இறந்ததை உறுதிப்படுத்தி விட்டு, அங்கிருந்து வீட்டுக்குச் சென்றான். கொலை செய்தபோது அணிந்திருந்த சட்டையை கழற்றி, பைக்கில் வைத்து விட்டு, வேறு சட்டையை அணிந்து புறப்பட்டான். அவினாசி ரோட்டில் உள்ள குப்பை தொட்டியில் ரத்தக்கறை படிந்த சட்டையை போட்டான். பின், நண்பர்கள் ஜெயராஜ், செல்வமணி, மாதேஷ் ஆகியோருடன் மதுக்கடைக்குச் சென்று மது குடித்துள்ளான். அங்கிருந்து மாதேஷை மட்டும் ஏற்றிக் கொண்டு, தெக்கலூர் சென்றபோது, அவினாசி - ஆட்டையாம் பாளையம் அருகே லாரி மோதி இறந்தான்.

ஒரே பனியன் நிறுவனத்தில் வேலை செய்த இருவரும் பழகி, பல ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவ்வப்போது சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்ற ரமேஷ், நகைகளை வாங்கி அடமானம் வைத்து செலவு செய்துள்ளான். கொலை நடந்த அன்று காலை கூட, திருப்பூரில் உள்ள பிரபல வங்கிக்குச் சென்று பணம் எடுத்துள்ளான். இதை வங்கியில் உள்ள கேமரா மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் காவல்துறையினர். அவன் அணிந்திருந்த சட்டையை ரத்தக்கறையுடன் குப்பை தொட்டியில் இருந்து கைப்பற்றியிருக்கிறார்கள். கொலை நடந்த ஆகஸ்ட் 5ம் தேதியும், அதற்கு முந்தைய ஒரு வாரத்திலும் சீதாலட்சுமி தன் மொபைல் போனில் இருந்து ரமேஷ் எண்ணை தவிர வேறு யாருக்கும் போன் செய்யவில்லை. ஆகஸ்ட் 5ம் தேதி காலையில் இருந்து மாலை வரை இருவரும் 900 வினாடி, 1,500 வினாடி, 700 வினாடி என்று இடைவிடாமல் பேசி உள்ளதை உறுதி செய்துள்ளனர். ரமேஷை கணவன் போல் எண்ணி வாழ்ந்த சீதாலட்சுமிக்கு, அவன் திருமணம் செய்து கொள்வது பிடிக்கவில்லை. கூடுமானவரைக்கும் சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்றுக் கொண்ட ரமேஷுக்கு, அவள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்த வெறுப்பு கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.

கொலை நடந்த இரவு 7.02 மணி முதல் 8.00 மணி வரை ரமேஷûக்கு, அவனது நண்பர்கள் தொடர்ந்து போன் செய்துள்ளனர். ஆனால், அவன் போனை எடுக்கவில்லை. இரவு 8.15 மணிக்கு, "மிஸ்டு காலில்' இருந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு ரமேஷ் பேசியுள்ளான். அதன் பிறகே நண்பர்களுடன் குடித்து விட்டு, பைக்கில் சென்று லாரியில் மோதி இறந்தான். கள்ளக்காதலி சீதாலட்சுமியை கொலை செய்த ரமேஷ், அடுத்த இரண்டரை மணி நேரத்தில் விபத்தில் இறந்தது ஆச்சரியமாகவே உள்ளது.

கணவனுக்கு துரோகம் இழைத்த சீதாலட்சுமி கொலையான இரண்டரை மணி நேரத்தில் நடந்த விபத்தில் ரமேஷ் உடல் நசுங்கி இறந்துள்ளான். கள்ளக்காதலுக்கு உதவிய ரமேஷின் நண்பன் மாதேஷ், சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி இறந்து விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.