Tuesday, November 9, 2010

கள்ளக்காதல்


பாளை அருகே உள்ள மேலபுத்தனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாபிள்ளை. இவரது மகள் சுதா என்ற சுப்புலட்சுமி (30). இவரது கணவர் மாரியப்பன் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சுதா தனது 2 பெண் குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கூலிவேலை செய்து வந்த சுதாவுக்கு கீழப்புத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பார்வதி (வயது 35) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பார்வதிக்கு திருமணமாகி மாரிசெல்வி என்ற மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த விசயம் தெரிந்து ஆத்திரமடைந்த அய்யாபிள்ளை, மகள் சுதாவை கண்டித்தார்.

இதனால் கள்ளக்காதலியை சந்திக்க முடியாமல் தவித்த பார்வதி, நேற்று நள்ளிரவு 11 மணிக்கு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது சுதா வீட்டிற்குள் நுழைந்தார். கள்ளக்காதலனை எதிர்பார்த்திருந்த சுதா அவரை வீட்டின் மாடி அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர்.

நள்ளிரவு மாடியில் சத்தம் கேட்பதை அறிந்த சுதாவின் தம்பி மாரி செல்வம், தந்தை அய்யாபிள்ளை, தாயார் செல்லம்மாள் ஆகியோரை எழுப்பி மாடிக்கு சென்றார். அங்கு அவர்கள் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஆத்திரமடைந்த அவர்கள் அருகில் கிடந்த இரும்பு பட்டை, மண்வெட்டி கணை ஆகியவற்றால் பார்வதியை சரமாரி தாக்கினார்கள். அவரை அடிக்காதீர்கள் என்று தடுத்த சுதாவுக்கும் சரமாரி அடி விழுந்தது. இதில் பார்வதி, சுதா ஆகியோரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. நள்ளிரவு நடந்த இந்த சம்பவத்தால், அந்தப்பகுதியில் ஏராளமானவர்கள் கூடினார்கள்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், செந்தட்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிய கள்ளக்காதல் ஜோடியை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே பார்வதி இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சுதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆயிரத்தில் ஒருவன்





No comments:

Post a Comment